ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், குடும்ப வன்முறைகளால் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.
குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் கவனயீர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்குரிய ஐந்தாண்டுகள் திட்டத்துக்கு கூடுதலாக 925 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார்.
இவ்வாறு பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் தேசிய உரையாடல் இருந்தாலும், வன்முறைச் சம்பவங்கள் குறையவில்லை. குடும்ப வன்முறையில் 2023 ஆம் ஆண்டு 64 பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர். 2024 இதுவரையான காலப்பகுதியில் 62 பெண்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.