ஆஸ்திரேலியாவின் தொலைதூர Northern Territory தீவில் சட்டவிரோதமாக வந்திறங்கிய வெளிநாட்டார் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆஸ்திரேலியா Northern Territory இல்
உள்ள குரோக்கர் தீவொன்றில கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேற்படி நான்கு பேரும் நவுருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனரா என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறவில்லை.
ஆர்ன்ஹெம் நிலத்திற்கு அருகிலுள்ள கரிக் குணக் பார்லு தேசிய பூங்காவின் வடக்கே தீவில் நான்கு வெளிநாட்டினர் திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் டோனி பர்க்கின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் அரசாங்கத்தின் கீழ் எந்த ஒரு மனிதக் கடத்தல் முயற்சியும் வெற்றி பெறவில்லை. படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பூஜ்ஜியமே.”என்றார்
நிழல் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேட்டர்சன், "இது உறுதிப்படுத்தப்பட்டால், தொழிலாளர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நமது எல்லைகளை மீறி ஆஸ்திரேலிய எல்லையை அடைந்த எட்டாவது படகு இதுவாகும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் செவ்வாயன்று "எங்கள் எல்லைகள் அல்பானிய அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பாக இல்லை" என்று அல்பானிய அரசை விமர்சித்தார்.
சபா.தயாபரன்.