பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் ஆஸ்திரேலியா வந்திருந்தவேளை அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சுயாதீன செனட்டர் லிடியா தோர்ப்பின் செயலைக் கண்டித்து செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டன தீர்மானத்துக்கு ஆதரவாக 46 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
விமான தாமதம் காரணமாக செனட்டர் லிடியா தோர்ப்பால், வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாமல்போனது.
வாக்கெடுப்பு முடிந்த பின்னர் சபைக்கு வந்த லிடியா, தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மன்னார் மீண்டும் வந்தால்கூட தான் எதிர்ப்பேன் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பெவோங்கினால் மேற்படி தீர்மானம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.