Geelong நகரில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை வேட்டையில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.
Geelong பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இலக்குவைக்கப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவத்தையடுத்து Geelong நகரில் கடைகள் சில மூடப்பட்டன. இன்று பிற்பகல்வேளை அவை மீள திறக்கப்பட்டன.