ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் சிறந்த முன்னேற்றமும், திருப்பமும் ஏற்பட்டுள்ளது என்று சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரேஸிலில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள சீன ஜனாதிபதி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
இரு நாடுகளுக்கிடையில் மூண்டிருந்த இராஜதந்திர போர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து, வர்த்தக உறவு மேம்பட்டுவரும் நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் வர்த்தக உறவு பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது.
இரு தரப்பு சந்திப்புக்காக அடுத்த வருடம் சீனா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு, சீன ஜனாதபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
சீன பொருட்களுக்கு கூடுதல் வரியை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக போர் மூளும் என அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் இதனை தடுப்பதற்கு தனது நடுநிலைக் கொள்கையை ஒரு சமரச கருவியாக பயன்படுத்துவதற்கு கன்பரா தயாராகிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.