தன்னை கொடுமைப்படுத்திய கணவனுக்கு போதைப்பொருள் கலந்த பிஸ்கட்டுகளை வழங்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் மனைவியின் சிறை தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவத்துக்காக விக்டோரியாவை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு 2023 ஆம் ஆண்டு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2020 செப்டம்பர் முதலாம் திகதியே 68 வயதான தனது கணவரை அவர் கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஆட்சேபித்து அவர் மேன்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே தண்டனை காலம் 10 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏழு வருடங்களில் அவர் பிணைகோரி விண்ணப்பிக்கலாம்.
தனது பெயரை உடலில் பச்சை குத்துமாறு கணவர் வற்புறுத்தியதாகவும், மகனின் இறுதிச் சடங்குக்குகூட செல்ல அனுமதிக்கவில்லை எனவும் குறித்த பெண் கூறியுள்ளார்.