சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவானது யூதர்களுக்கு எதிரான செயல் என்று இஸ்ரேல் பிரதமர் சாடியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே, இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தீர்ப்பை ஏற்கப்போவதில்லை எனவும், காசாவில் போர்க்குற்றம் நடக்கவில்லை எனவும் இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.
அதேவேளை சர்வதேச நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும், சர்வதேச சட்டத்தின் நிலைநிறுத்துவதற்கான அதன வகிபாகத்தையும் ஆஸ்திரேலியா மதிக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்புகளும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.