16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கு ஆஸ்திரேலியா தயாராகிவரும் நிலையில், இந்த முடிவுக்கு எலோன் மஸ்க் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் இணைய அணுகலை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது என்று எலோன் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் ஆட்சியில் எலோன் மஸ்க்குக்கு முக்கிய பதவி வழங்கப்படவுள்ள நிலையில், அவரின் விமர்சனம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
சிறார்களுக்கு சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தின்படி எக்ஸ், டிக்டொக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் சிறுவர்கள் கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கத் தவறினால், 50 மில்லியன் டொலர்கள்வரை அபராதம் விதிக்கப்படும்.