மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கன்பராவின் முன்னாள் ஆசிரியர் ஒருவர், கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டேவிட் டேம்ப்சே என்ற 67 வயதான குறித்த நபர் அநாகரீகமான செயல் மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட 8 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
பாடசாலைக்கு அருகில் செல்லக்கூடாது, பாதிக்கப்பட்ட தரப்புகளை அணுகக்கூடாது , சிறார்களுடன் தனியாக இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது சிட்னியில் இருக்கும் டேவிட் டெம்ப்சே, 2023 ஆம் ஆண்டு கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகிவிட்டார் எனக் கூறப்படுகின்றது.
வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் கன்பரா நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.