வடக்கு குயின்ஸ்லாந்தில் காருக்குள் இரண்டு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பல மணிநேரம் காருக்குள் இருந்ததால் வெப்பநிலை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், மரண பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
வாகனத்துக்குள் சிறுமி மயக்கமடைந்த நிலையில் நேற்றுமதியம் காணப்பட்டதாகவும், அவருக்கு முதுலுதவி அளிக்கப்பட்டாலும் அவரை காப்பாற்ற முடியாமல்போனது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை மீட்கப்படும்போது காருக்குள் அவர் மாத்திரமே இருந்துள்ளார் எனவும், பெற்றோர் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
எத்தனை மணிநேரம் அவர் காருக்குள் இருந்தார் என தெரியவில்லை, விசாரணைக்கு பெற்றோர் மற்றும் குடும்பத்தார் பொலிஸாருக்கு ஒத்துழைத்துவருகின்றனர்.