பூர்வக்குடி மக்கள் விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தோல்வி அடைந்திருந்தாலும், அது முன்னோக்கி பயணிப்பதற்குரிய இருந்த ஊக்கியாகும் என்று முன்னாள் பூர்வக்குடி அமைச்சர் Linda Burney தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் முதலாவது பூர்வக்குடி பெண் அமைச்சரான Linda Burney அண்மையில் அமைச்சு பதவி துறந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பல வருடங்களாக குரல்கள் எழுப்பட்டு வந்தாலும், எதிர்காத்தில் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் Linda Burney சுட்டிக்காட்டினார்.
உண்மையான நல்லிணக்க நாடாக மாறுவதற்கு ஆஸ்திரேலியா இன்னும் முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.