இடியுடன்கூடிய அடை மழை ஏற்படும்போது ஆஸ்துமா அறிகுறிகள் மோசமடைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வூல்காக் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எனும் ஆய்று நிறுவனத்தால் விக்டோரியாவில் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையினால் ஏற்படும் ஆஸ்துமா என்பது , காற்றில் உள்ள புல் மகரந்தத்தின் கலவையால் ஏற்படுவதாகும். இது மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் மற்றும் தொடர் இருமல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்தும். இதனால் முதியோருக்கு கடும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
சீரற்ற காலநிலையின்போது ஏற்படும் ஆஸ்துமா ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாகும், இது காலநிலை மாறும்போது மோசமடையக்கூடும்.
சபா.தயாபரன்.