மெல்பேர்ண் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து அவரச வெளியேறல் கதவு ஊடாக வெளியேற முற்பட்ட பயணியொருவர் பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு நடத்தை மற்றும் விமான விதிமுறைகள் மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயணி அவசர வெளியேறல் பிரிவு கதவை திறக்க முற்பட்டபோது, விமான பணியாளர்களால் தடுக்கப்பட்டுள்ளார். பின்னர் விமான இறக்கையொன்றில் நடந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.