மெல்பேர்ண் வடமேற்கு பகுதியில் 14 வயது சிறுமியொருவரை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டார் எனக் கூறப்படும் விக்டோரிய நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வெள்ளை வேனை ஓட்டிச்சென்ற இனந்தெரியாத நபர், ஸ்பீரிங் வழியாக நேற்று மாலை நடந்துசென்று கொண்டிருந்த சிறுமியை அணுகியுள்ளார். தனது வாகனத்தில் ஏறுமாறும் கோரியுள்ளார்.
எனினும், அவரின் கோரிக்கையை சிறுமி ஏற்க மறுத்துள்ளார். வீடு திரும்பியதும் இது பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
50 வயதான சந்தேக நபர் மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த வெள்ளைவேன் தொடர்பான படங்களை பொலிஸார் வெளியிட்டு, விசாரணைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.
மெல்பேர்ண் கிழக்கு பகுதியில் குழந்தைகளை கடத்துவதற்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்று, ஒரு வாரத்துக்கு பின்னர் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.