மெல்பேர்ண் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரில் பெண் ஓட்டுனரின் காலில் கொடிய பாம்பு ஊர்ந்ததைக் கண்ட பெண் நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக காரை நிறுத்தி காரிலிருந்து குதித்து ஓடியதால் நெடுஞ்சாலை சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.
பெண் ஓட்டுனர் சாலையில் சென்ற கார்களை நிறுத்தி உதவிக்கு அழைத்தார். சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட காவல் துறையினர் snake control இன் உதவியுடன் காரிலிருந்து பாம்பை வெளியில் எடுத்தனர்.
மோனாஷ் நெடுஞ்சாலையில் மணிக்கு 80கிமீ (50 மைல்) வேகத்தில் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தபோது, காலில்ஏதோ உணர்ந்ததாக பெண் அதிகாரிகளிடம் அதிர்ச்சியுடன் கூறினார்.
மருத்துவ உதவியாளர்களால் அந்தப் பெண் பரிசோதிக்கப்பட்டார், ஆனால் பாம்பினால் அவர் கடிக்கப்படவில்லை என்று அறிய முடிந்தது.
உலகின் மிகவும் விஷமுள்ள ஊர்வனவற்றில் ஒன்றான புலி பாம்புஎன அடையாளம் காணப்பட்ட இந்த பாம்பு வீடுகள், மக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் ஆகியவற்றிலிருந்து தள்ளி வெகு தொலைவில்" மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.