பாதுகாப்பு படையினரால் இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான உறுதிமொழியை அரசு வழங்கியுள்ளது.
பாதுகாப்பு படையினர் தொடர்பான ரோயல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் வெளியாகி, மூன்று மாதங்களுக்கு பிறகு அது தொடர்பான முறையான பதிலை அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
ரோயல் கமிஷனின் 122 பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு முறையான மறுசீரமைப்பு இடம்பெறும் என்று அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
122 பரிந்துரைகளில் 104 கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, 17 பரிந்துரைகள் பரீசிலனை மட்டத்தில் உள்ளது. மேலும் ஒரு பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. காயங்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றிய பரிந்துரையே நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் படையினர் விவகாரங்கள் தொடர்பான மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கு அமைப்பொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. 2025 செப்டம்பருக்குள் இது தொடர்பான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இடம்பெறும் எனவும், அதற்கு முன்னர் இடைக்கால தலைவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையில் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினை இருப்பதை கண்டறிந்துள்ள ரோயல் கமிஷன், முழுமையான விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. அதனை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
திகதி எல்லை இன்னும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.