சிட்னி இன்னர் வெஸ்டில் இளைஞர் ஒருவர்மீது கொலை வெறித் தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவிலேயே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
22 வயது இளைஞர்மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்திய குழுவினர், பொலிஸார் வருவதற்குள் தப்பிச்சென்றுள்ளனர்.
அவர்கள் பயணித்த கார் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்பின்னர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 18 வயது இளைஞர்கள் இருவரும், 19 வயது இளைஞர் ஒருவரும் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். பின்னர் 54 வயது நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரையும் கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.