தனது 8 வயது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறையிடாமல் அதனை மறைக்க முற்பட்டார் எனக் கூறப்படும் தாய்க்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸாருக்கு கட்டாயம் முறைப்பாடு செய்யப்பட வேண்டும் என்பது குயின்ஸ்லாந்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிலேயே இதற்குரிய சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் இச்சட்டத்தைமீறியதற்காக தண்டனை பெறும் முதல் நபர் இவராவார்.
குறித்த சிறுமியின் தந்தையாலேயே அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர் பல தடவைகள் மகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரமே 41 வயதான நபர் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே சிறுமியின் தாய்க்கு இன்று ஆறு மாதகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் தந்தை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.