மெல்பேர்ணில் யூத வழிபாட்டு தலம்மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தீ வைப்பு தாக்குதல் பயங்கரவாத செயலாக இருக்கக்கூடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சம்பவமானது ஆஸ்திரேலியாவில் வாழும் யூத சமூகத்தை கொந்தளிப்படைய வைத்துள்ளது. இதுவிடயத்தில் இஸ்ரேல்கூட இராஜதந்திர ரீதியில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பெடரல் பொலிஸார் மற்றும் விக்டோரியா பொலிஸாருக்கிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
இதன்போதே தீ வைத்து தாக்குதல் பயங்கரவாத செயல் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதுடன், இதன் பின்புலம் பற்றி பலகோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
யூத வழிபாட்டு தலம்மீதான தாக்குதல் பயங்கரவாத செயல் என்பதை விக்டோரிய மாநில பிரீமியரும் உறுதிப்படுத்தியுள்ளார்.