பூர்வக்குடி மக்கள் பரவலாக வாழும் Alice Springs பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 வயதான பெண்ணொருவரே சனிக்கிழமை இவ்வாறு வன்கொடுமையை எதிர்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் கூக்குரல் எழுப்பியதையடுத்து, அயலவர்கள் திரண்டதால் சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. பின்னர் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நாளை மறுதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.