செங்கடல் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா தலைமைத்துவம் வகிக்கவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆறு மாதங்களுக்கு இவ்வாறு ஆஸ்திரேலியா தலைமைப்பதவி வகிக்கும் என்று இன்று பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்தில் செங்கடல் பகுதி மிக முக்கயமானதாகக் கருதப்படுகின்றது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், செங்கடல் பகுதியில் வணிக கப்பல்கள்மீது Houthi கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இதனால் செங்கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் கூட்டாக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்திவருகின்றன.
செங்கடலுக்கு போர்க்கப்பலொன்றை அனுப்புமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்திருந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தலைமையேற்கும் ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கில் உள்ள தமது நாட்டு படையினரையே அதற்காக பயன்படுத்தவுள்ளது.