மெல்பேர்ணில் தீவைப்பு தாக்குதலுக்கு இலக்கான யூத வழிபாட்டுத் தலத்தை மீள கட்டியெழுப்புவதற்குரிய நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி உறுதியளித்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான யூத வழிபாட்டு தலத்துக்கு இன்று சென்றிருந்த பிரதமர், யூத சமூகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும், இத்தகைய பயங்கரவாத செயலை அனுமதிக்கப்போவதில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தீ வைப்பு தாக்குதல் சம்பவத்துடன் மூவர் தொடர்புபட்டுள்ளனர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனை அடிப்படையாகக்கொண்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.