நியூ சவூத் வேல்ஸில் கத்தியை காட்டி மிரட்டினார் எனக் கூறப்படும் நபர்மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸ் பாதுகாப்புடன் அவர் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
சவூத் கிராப்டனிலுள்ள, இற்கு இன்று காலை பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர்.
குழப்பத்தில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கட்டுப்படுத்துவதற்கு முன்னர், அவர் கத்தியுடன் பொலிஸாரை அணுகியுள்ளார். இதன்போதே அவரை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழக்கவில்லை. காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.