பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இஸ்ரேலால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆஸ்திரேலியா எதிராக வாக்களித்துள்ளது.
ஐ.நா. வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு எதிராக ஆஸ்திரேலியா இவ்வாறு வாக்களித்தமையானது இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர விரிசலை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேல் உடன் வெளியேற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை ஏற்கனவே ஆஸ்திரேலியா ஆதரித்திருந்த நிலையில், தற்போதைய முடிவும் இஸ்ரேலை கொதிப்படையச் செய்துள்ளது.
காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமையை தடை செய்வதற்கான இஸ்ரேலின் முடிவை திரும்பப் பெறுவதற்கு அழைப்பு விடுக்கும் இரண்டு தீர்மானங்கள் ஐ.நாவில் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டன.
158 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்தன. ஆஸ்திரேலியா உட்பட 159 நாடுகள், ஐநா நிறுவனத்தை தடை செய்யும் யோசனையை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை ஆதரித்தன. நிறைவேற்றப்பட்டுள்ள மேற்படி தீர்மானங்கள் ஜனவரி மாதம் நடைமுறைக்கு வர உள்ளது.
சபா.தயாபரன்