சிட்னி நகரில் உள்ள பிட் ஸ்ட்ரீட் ஹோட்டலுக்குள் தடைசெய்யப்பட்ட நாஜி வணக்கத்தை செலுத்தியதாக கூறப்படும் 68 வயதான நபர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஹோட்டலுக்குள் தடைசெய்யப்பட்ட வணக்கத்தை நிகழ்த்தியதாகவும், வெளியேறுமாறு கூறியபோது வெளியேறவில்லை என்றும் கூறப்படுகிறது.
பொது இடத்தில் காரணம் இல்லாமல் நாஜி சின்னத்தை தெரிந்தே காட்டியது, நாஜி சல்யூட் என்று ஒரு பொது இடத்தில் சைகை செய்தது மற்றும் வளாகத்தை விட்டு வெளியேற சொல்லியும் கேட்காமல் கட்டளையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அந்த நபருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது மற்றும் சனிக்கிழமை பரமட்டா நீதிமன்றத்தை எதிர்கொள்வார்.