தென் பசுபிக் நாடான பீஜி தீவில், நஞ்சான மதுபானத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நான்கு ஆஸ்திரேலியர்களில் இருவர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்துள்ள இரு பெண்களும் இன்று மாலை சிட்டி திரும்பவுள்ளனர்.
பீஜி தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஆஸ்திரேலிய பெண்கள் கோரல் கோஸ்ட் பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தனர்.
சனிக்கிழமை அவர்கள் மது அருந்திய நிலையில் திடீரென நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகினர். இதனையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
நான்கு ஆஸ்திரேலிய பெண்கள் உட்பட எழுவர் இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு பெண்கள் குணமடைந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பில் பீஜி நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேவேளை பீஜி தீவுக்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்கள் மது அருந்தும்போது மெத்தனால் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.