" பாலி நைன் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தேசிய கதாநாயகர்களோ அல்லது அரசியல் கைதிகளோ அல்லர் என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக இந்தோனேசியாவில் இரு தசாப்தங்கள் சிறை தண்டனை எதிர்கொண்ட பாலி நைன் கும்பலைச் சேர்ந்த ஐந்து ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களை விடுவித்துக் கொள்வதற்காக இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் பாலி நைன் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இது இளைஞர்கள் மத்தியில் தவறான தகவலை கொண்டு செல்லக்கூடும் எனவும், அவர்கள் கதாநாயகர்கள் அல்லர் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ போதைப்பொருள் கடத்தினால் சிறை தண்டனையைதான் எதிர்கொள்ள நேரிடும், வாழ்ககையை இழக்க நேரிடும் என்ற தகவலே இளைஞர்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் எனவும் பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.