கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு சிட்னி உயர்நீதிமன்றத்தால் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி மாதம் வடக்கு பரமட்டா பகுதியிலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான மெராஜ் ஜாபர் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவியை கொலைசெய்துவிட்டு, உடலத்தை அமிலம்மூலம் கரைப்பதற்கு இவர் முற்பட்டுள்ளார். அமிலம் மூலம் எவ்வாறு அதனை செய்வது என்பது பற்றி அவர் கூகுளில் தேடியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
மனைவி கொல்லப்படும்போது கர்ப்பம் தரித்து இருந்ததாகவும், டிஎன்ஏ பரிசோதனைமூலம் அவர் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2038 ஆம் ஆண்டே ஜபார் பிணைக்கு விண்ணப்பிக்க முடியும்.