கூட்டாட்சி தேர்தலை குறிவைத்துள்ள சுயாதீன செனட்டர் பாத்திமா பேமன் தலைமையிலான ஆஸ்திரேலியக் குரல் கட்சி, தற்போது வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பாத்திமா பேமனின் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அனைத்து மாநிலங்களிலும் செனட் வேட்பாளர்களை களமிறங்குவதற்கு ஆஸ்திரேலியக் குரல் கட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் மாநிலங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
லேபர் கட்சியிலிருந்து கடந்த ஜுலை மாதம் விலகிய பாத்திமா பேமன், ஆஸ்திரேலியக் குரல் எனும் புதிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பினார்.
அடுத்த கூட்டாட்சி தேர்தலில் அவர் களமிறங்கமாட்டார். ஆனால் கட்சி தலைவராக ஆஸ்திரேலியா முழுவதும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
கூட்டாட்சி தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.