விமான பயணத்தின்போது பெண் பயணியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் இலங்கையை சேர்ந்த நபர், ஆஸ்திரேலியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.
கொழும்பிலிருந்து மெல்பேர்ண் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த 41 வயது நபரொருவரே, குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த நபர் பிராட்மெடோஸ் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் திகதி இடம்பெறவுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், விமான ஊழியர்களுக்கு தகவல் அளித்த பின்னர் அது தொடர்பில் பெடரல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் மெல்பேர்ண் வந்தடைந்த பிறகு பொலிஸார், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர். இதன்அடிப்படையிலேயே குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.