சிட்னி தெற்கு பகுதியில் பெண் மற்றும் பொலிஸ் அதிகாரி உட்பட எழுவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர்மீது எட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
58 வயதான குறித்த நபர் தன்னுடன் நேற்று காரில் பயணித்த 48 வயது பெண்ணை குத்திவிட்டு, காரை விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
இதனையடுத்து உதவிக்கு வந்த நபர்கள்மீதும் அந்நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது பொலிஸ் அதிகாரி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர்.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப வன்முறை, பொறுப்பற்ற விதத்தில் வாகனம் ஓட்டியமை மற்றும் கொலை முயற்சி உட்பட எட்டு குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.