பாலஸ்தீன ஆதரவு ஆடை அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணொருவரை மிரட்டினார் எனக் கூறப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு சிட்னியிலுள்ள ஷாப்பிங் சென்டரிலேயே வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தன்மீது தொடுக்கப்பட்ட வாய்மொழிமூலமான தாக்குதலை பாதிக்கப்பட்ட பெண் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு ரீசெட் அணிந்திருந்த பெண்ணை நோக்கி நடு விரலைக் காண்பித்து கடும் கடும் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார்.
மரியம் என தன்னை அடையாளப்படுத்தும் பாதிக்கப்பட்ட பெண், பாலஸ்தீன உரிமைகள் இயக்கத்தின் செயற்பாட்டாளராக செயற்படுகின்றார்.
எனது மகள் என்னுடன் இருந்தார், எம் இருவர்மீதும் பெட்டிகளையும் அவர் வீசியுள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.
மத அடிப்படையில் வன்முறையை தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்கீழ் 39 வயது பெண் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.