ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 2023 - 2024 ஆம் நிதியாண்டில் மாத்திரமே சிறைச்சாலைகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் குயின்ஸ்லாந்து உள்ளது.
குயின்ஸ்லாந்து சிறைச்சாலைகளில் உயிரிழந்த 19 பேரில் ஐவர் பூர்வக்குடி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்படி காலப்பகுதியில் 24 பூர்வக்கடி மக்கள் உட்பட 104 பேர் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.