தைவானில், ஆஸ்திரேலிய மாணவரொருவருக்கு விஷம் கொடுத்தாகக் கூறப்படும் பெண்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
24 வயதான குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஷோரே என்பவருககே இவ்வாறு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது.
இரவு சந்தையொன்றில் அவர் தற்செயலாக விஷத்தை உட்கொண்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
எனினும், இச்சம்பவம் தொடர்பில் தைவான் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த மாணவருடன் நட்பாக இருந்த யாங் என்ற பெண் திட்டமிட்ட அடிப்படையில் விஷம் கொடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உணவு மற்றும் பானங்களில் எலி விஷத்தை கலந்து கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஷோரே பலமுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இறுதியில் அவரின் உறுப்பு செயலிழந்தது. இதனையடுத்து
அவர் கடந்த மே மாதம் அவசர மருத்துவ விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்கும் பொலிசார், ஷோரியை சந்திப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அந்த பெண்ணின் பிரிட்டிஷ் கணவர் 2023 ஜனவரியில் இறந்துவிட்டதாகவும் அவரது மரணம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
சபா.தயாபரன்