போர்க் கைதிகள் விடயத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டத்திட்டங்களை ரஷ்யா கடைபிடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனுக்காக ரஷ்யாவுடன் போரிட்ட ஆஸ்திரேலியர் ஒருவரை ரஷ்யா கைது செய்துள்ள நிலையிலேயே கன்பரா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
32 வயதான ஒஸ்கார் என்ற ஆஸ்திரேலிய நபரை, ரஷ்ய மொழி பேசும் ஒருவர் தடியால் தாக்கும் காணொளி வெளியாகியுள்ள நிலையில், மனிதாபிமானமாக செயற்படுமாறு ரஷ்ய தரப்பை ஆஸ்திரேலிய அதிகாரிகள் இராஜதந்திர மட்டத்தில் கோரியுள்ளனர்.
ஆஸ்திரேலியா இராஜதந்திர ரீதியில் தொடர்புகொண்டுள்ளமை ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இது விடயம் தொடர்பில் கன்பராவின் அணுகுமுறை பற்றியும் ரஷ்யா கவனம் செலுத்தியுள்ளது.