கிறிஸ்மஸ் தீவில் கைவிலங்கிடப்பட்டு தரையில் வீழ்த்தப்பட்ட குடியேற்றக் கைதியிடம் மன்னிப்புக் கோருவதற்கு ஆஸ்திரேலியா அரசு மறுத்துள்ளது.
2021 மார்சில் குறித்த கைதிக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மனித உரிமை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
2014 விசா இரத்து செய்யப்பட்ட பின்னர் 10 வருடங்களுக்கு மேலாக தடுப்பு காவலில் இருந்த குறித்த குடியேற்றக் கைதி, அதன்பின்னர் கிறிஸ்மஸ் தீவில் உள்ள குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
துனியார் பாதுகாப்பு நிறுவனமான ‘செர்கோ’ என்ற நிறுவனமே தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஏற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் அதிகாரிகளால் அவர் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதற்கு அரசு மறுத்துள்ளது.