சிட்னி வடமேற்கு பகுதியில் ஆணொருவர்மீது கத்தியை வீசி தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் 38 வயதான ஆணின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய 53 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.