மேற்கு ஆஸ்திரேலியாவில், அடிலெய்டின் நகர் பகுதியில் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்சுக்குள் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுமியொருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையிலான இந்த மோதல் சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
பஸ் சாரதியால் பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விரைந்து செயற்பட்ட பொலிஸார் 17 பேரை கைது செய்தனர்.
வன்முறையில் ஈடுபட்டமை, சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது. எனினும், பொது போக்குவரத்தை பயன்படுத்த மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.