மேற்கு சிட்னியில் ஏழாவது மாடியிலிருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் படுகாயம் அடைந்த நிலையில், வீதியில் காணப்படுகின்றார் என அவசர சேவை பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த துணை மருத்துவர்கள், 39 வயது பெண்ணுக்கு முதலுதவி அளித்தாலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 40 வயது ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தவறி விழுந்தாரா அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.