ஹங்கேரி நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் கடத்துவதற்கு முற்பட்ட இரு ஹங்கேரிய பிரஜைகள் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 வயதான இவ்விருவரும் பேர்த் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர். இருவரும் ஹெரோயின் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கிய நிலையிலேயே வந்துள்ளனர்.
இதனால் ஹெரோயினை அகற்றுவதற்காக அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் 610 கிராம் ஹெரோயின் அகற்றப்பட்டது.
இவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இக்குற்றத்துக்காக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.