யுவதியொருவரை சுட்டுக்கொலைசெய்துவிட்டு தலைமறைவாகி இருந்த இருவர் குயின்ஸ்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 மற்றும் 32 வயதுடையவர்களே பிரிஸ்பேன் தெற்கிலுள்ள லோகன் பகுதியில் வைத்து நேற்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் நாளை மறுதினம் வியாழக்கிழமை இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
23 வயதான யுவதி ஒருவரே டிசம்பர் 22 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இருவரும் தப்பிச்சென்று தலைமறைவாகி இருந்தனர். அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.