ஆஸ்திரேலிய விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்டுபடுத்தினார் எனக் கூறப்படும் நபருக்கு பீஜி நாட்டு நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
Virgin Australia விமானத்தில் பணிபுரியும் 21 வயதான மெல்பேர்ண் யுவதியொருவர், ஜனவரி முதலாம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் 24 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளையே அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். குறித்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி இச்சம்பவம் தொடர்பான விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.