குயின்ஸ்லாந்தில் கிராமப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரு நாய்களும் உயிரிழந்துள்ளன.
நேற்றிரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட இத் தீ விபத்தையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.எனினும், குறித்த இளைஞன் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இத் தீ விபத்து சந்தேகத்துக்கிடமானதாக இல்லையென பொலிஸார் கருதுகின்றனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.