இஸ்லாம் மதத்துக்கு மாறி தலிபான் அமைப்புக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருந்த ஆஸ்திரேலியர் உயிரிழந்துள்ளார்.
ஜப்ரைல் உமர் என தனது பெயரை மாற்றிக்கொண்ட டிமோதி என்பவர் உயிரிழந்துள்ளதை தலிபான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு தலிபான் அமைப்பால் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டிருந்த அவர், கைதிகள் பரிமாற்ற திட்டத்தின்கீழ் 2019 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அவர் புற்றுநோயால் நேற்று காலமானார் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
விரிவுரையாளரான இவர், தலிபான்களின் வெற்றியைக் கொண்டாடவே காபூல் செல்வதாக அறிவித்துவிட்டே சென்றுள்ளார்.
இவர் காபூலில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியுள்ளார் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.