சிட்னியை சேர்ந்த மாணவரொருவர், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாணவிகளின் ஆபா படங்களை உருவாக்கினார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
மாணவிகளின் போலி படங்களை உருவாக்கி, போலியான சமூகவலைத்தளங்கள் ஊடாக அவற்றை பகிர்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை பொலிஸார் விசாரித்துவருகின்றனர்.
இப்படியான நடத்தையை ஏற்க முடியாது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இணைய பாதுகாப்பு ஆணையாளருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவருக்கு எதிராக பாடசாலை நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுத்துள்ளது.