மெல்பேர்ண் மேற்கு பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஹெய்சன் பார்க்வே பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை அவசர சேவை பிரிவினர் வைத்தியசாலை கொண்டுசென்றாலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இக்கொலைச் சம்பவத்தின் பின்புலம் பற்றி பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேவேளை நோர்லேன் பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூடு மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கிலேயே இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.