பிரிஸ்பேன் தெற்கு பகுதியில் நேற்றிரவு நபரொருவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
36 வயது நபரொருவரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.