காசாவில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டுவரும் உலக உணவு திட்ட ஊழியர்கள் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகின்றனர்.
உலக உணவு திட்ட தன்னார்வ ஊழியர்கள் பயணித்த வாகனம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேல் உட்பட அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தனது எக்ஸ் தளத்தில் வெளிவிவகார அமைச்சர் Penny Wong பதிவிட்டுள்ளார்.