பிரிஸ்பேனுக்கு மேற்கே உள்ள பல்பொருள் அங்காடியில் ஊழியர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 13 வயது சிறுவன்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையே குறித்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த 63 வயதான பெண், வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
கத்திக்குத்து தாக்குதலை நடத்திய 13 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பிணை வழங்கப்படவில்லை. வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.