பேர்த் விமான நிலையத்தில் பெடரல் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிட்னியிலிருந்து பயணித்த விமானத்தில் குறித்த பெண் முறையற்ற விதத்தில் நடந்துள்ளார். விமான விதிமுறைகளையும் மீறியுள்ளார்.
இது தொடர்பில் பெடரல் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னர், பேர்த் விமான நிலையத்தில் வைத்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்த முற்பட்டுள்ளனர்.
34 வயதான குறித்த பெண்ணை பொலிஸார் அழைத்துச்செல்ல முயன்றபோது , அவர் அதிகாரிகளை தாக்கியுள்ளார். பேனையை பயன்படுத்தியே அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த அதிகாரிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த பெண் பேர்த் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்படவுள்ளார்.